புகை மூட்டம் சிறிது காலத்துக்கு நீடிக்கும்

1 smokeமீண்டும்  புகை மூட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது.

இன்று காலை கிள்ளானிலிருந்து ஜோகூரின் மூவார்வரை காற்றின் தரம் “ஆரோக்கியமற்றதாக” இருந்தது என சுற்றுப்புறத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

துணைக் கோளப் படங்களிலிருந்து சுமத்ராவில் 46 இடங்கள் “பற்றிக்கொண்டு எரிவதாக”த் தெரிகிறது.  அதனால் எழும் புகைமூட்டம் காற்றில் தீவகற்ப மலேசியாவுக்கு அடித்துக் கொண்டு வரப்படுகிறது. செப்டம்பர்வரை இந்நிலை நீடிக்குமாம்.