‘புயலில் பலியானவர் உடல் இருக்கும் இடம் ஆவியுலகத் தொடர்பாளருக்குத் தெரியுமாம்’

1 mediumபினாங்கில் கடும் புயலில் பினாங்கு அம்னோ கட்டிடத்தின் உயரே இருந்த இடிதாங்கி விழுந்ததில் ஒரு காருடன் ஆறு மீட்டர் ஆழ குழிக்குள் புதையுண்டதாக நம்பப்படும் ஒரு அங்காடி வியாபாரியின் உடல் எவ்வளவு தேடியும் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால், இப்போது ஆவியுலகத் தொடர்பாளர் ஒருவர் உடல் இருக்கும் இடத்தைக் ‘கண்டுபிடித்து’  விட்டதாகக் கூறுகிறார்.

13வயதான பூ ஜியா மிண்ட் (வலம்), அங்காடி வியாபாரியான லிம் சின் ஏய்க்கின் உடல் குழியின் முன்பகுதியில் பாகிஸ்தான் பள்ளிவாசலுக்கு அருகில் இருப்பதாகக் கூறினார்.

அவருடைய ஆவிதான் உடல் இருக்கும் இடத்தைக் காண்பித்ததாம்.