அடுத்த சில நாள்களுக்கு மழை: வானிலை துறை ஆருடம்

rainவானிலை துறை அடுத்த சில நாள்களுக்கு மலேசியாவின்  பல பகுதிகளில் மழை பெய்யும் என ஆருடம் கூறியுள்ளது.

பெர்லிஸ், கெடா, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மலாக்கா, ஜோகூர் ஆகிய மாநிலங்களில் மாலை வேளைகளில் மழை பெய்யும்.

கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகியவற்றில் மாலையிலும் இரவிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று ஓர் அறிக்கையில் அது கூறியது.