பள்ளிவாசல் உடைப்பிற்கு ரவூப் ஹக்கீம் தான் காரணம் – ஜனாதிபதி

eelam15713bமஹியங்கனை பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல்மீது சிங்கள காடையர்கள் தாக்குதல் மேற்கொண்டதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தான் காரணம் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை கண்டி ஜனாதிபதி மாளிகையில் முஸ்லிம் அமைச்சர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் மஹியங்கனை பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்த முஸ்லிம் அமைச்சர்கள், இவ்வாறான தாக்குதல்கள் காரணமாக அரசாங்கத்துக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, அப்படியா? மஹியங்கனை பள்ளிவாசலை தாக்கியுள்ளார்களா? யார் தாக்கினார்கள், எனக்குத் தெரியாதே என்று பதிலளித்துள்ளார்.

அதனையடுத்து பொதுபல சேனாதான் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக முஸ்லிம் அமைச்சர்கள் பதில் கூறவும் ஜனாதிபதி கடும் கோபமுற்றுள்ளார். நாட்டில் தற்போது பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தான் காரணம். அவர்தான் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது நாட்டில் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதாக பொய்ப்பிரச்சாரம் மேற்கொண்டார், சிங்கள மக்களை அநியாயமாக உசுப்பேத்தி விட்டார் என்றெல்லாம் பொரிந்து தள்ளியுள்ளார்.

TAGS: