விடுதலைப்புலிகளின் நிதிச்சேகரிப்பு தொடர்கிறது: இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டு

Sri Lankan Foreign Minister G.L. Peirisவெளிநாடுகளில் இன்னமும் விடுதலைப்புலிகள் நிதிச்சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என இலங்கை அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு அரசாங்கங்கள் உரிய கவனத்தை செலுத்தவேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய உறவுகள் குழுவிடம், வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்,  இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் பல தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

எனினும் சில நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் தொடர்வதாக ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இது தொடர்பில் குறித்த நாடுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.

TAGS: