ஐஜிபி: மைகார்கார்ட் மோசடி பற்றி அறியேன்

ஒரு கும்பல் வெளிநாட்டவருக்கு மைகார்டுகள் வழங்கிவருவது பற்றிய தகவல் தமக்குத் தெரியாது என்கிறார் போலீஸ்படைத் தலைவர் (ஐஜிபி) இஸ்மாயில் ஒமார்.

இதன் தொடர்பில் பாஸ் கடந்த ஆண்டு தொடங்கி பல போலீஸ் புகார்களைச் செய்துள்ளது.

“அது பற்றி எந்தப் புகாரையும் நான் பெறவில்லை”, என இன்று போலீஸ் பயிற்சி மைய(பூலாபோல்)த்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

பாங்கியில் ஒரு ஓய்வுத்தலத்தில், பல பேருந்துகளில் வந்திறங்கிய வெளிநாட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுவோருக்கு அந்தக் கும்பல் மைகார்ட் வழங்க முற்பட்டபோது அதை மடக்கியதாக பாஸ் புதன்கிழமை கூறிக்கொண்டது.

இவ்விவகாரம் தொடர்பில் அக்கட்சி 2010-இல், சாலாக் திங்கியிலும் இவ்வாண்டு தொடக்கத்தில் பாயா ஜராசிலும் சுபாங்கிலும் போலீஸ் புகார்களைச் செய்துள்ளது.