13வது திருத்தச்சட்டத்தை மாற்றும் நடவடிக்கை தொடரும்: இலங்கை அரசாங்கம்

keheliyaதிட்டமிட்டப்படி 13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை மாற்றம் செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அமைச்சர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இன்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய- இலங்கை உடன்படிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 13வது அரசியல்அமைப்பின் கீழ் சில விடயங்கள், திணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் நினைப்பது போல 13வது அரசியல் அமைப்பு முழுமையாக அகற்றப்படாது. அதன் சில பகுதிகளே மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

13வது அரசியல் அமைப்பில் மாற்றங்களை செய்யாதுபோனால் அதனைக் கொண்டு நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடரும் என்று அவர் எதிர்வுக்கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கேஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

TAGS: