பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை தமிழர்களாவர்!- இலங்கை பிரதமர்

dmjayaratneஇலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இந்திய தமிழர்கள் என்று அழைக்கப்படாது, அவர்களும் இலங்கையர்கள் என்று வகுதிக்குள் கொண்டு வரப்படவேண்டும் என்று பிரதமர் டி எம் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் இலங்கையில் நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் பரம்பரைகள் இலங்கையில் உருவாகியுள்ளன.

இந்தநிலையில் அவர்களை இன்னும் இந்திய தமிழர்கள் என்று அழைப்பது பொருத்தமான முறையாக இருக்காது.

இலங்கையின் வடக்கு, கிழக்கை தவிர்ந்த நிலையில் தென் பகுதியில் 15 இலட்சம் இந்திய தமிழர்கள் வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: