ஹக்கீம் மீண்டும் முஸ்லிம்களை காட்டிக்கொடுத்து விட்டார்!

rauff hakeemஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மீண்டும் முஸ்லிம்களை காட்டிக்கொடுத்து விட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேல்மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கடசியின் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்தக் குற்றச்சாட்டை செய்தியாளர் சந்திப்பின்போது சுமத்தியுள்ளார்.

போர்த்துக்கேயர் காலத்தில் இருந்து இலங்கையில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் தற்போதைய ஆட்சியில் அது மிகவும் மோசமாகியுள்ளது.

இந்தநிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க முயற்சிக்காமல் தனித்து போட்டியிடும் தீர்மானத்தை ஹக்கீம் எடுத்திருப்பது தவறான விடயம் என்று ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து வாக்கு கேட்டால் முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் தனித்து வாக்கு கேட்டு வாக்குகளை பெற்ற பின்னர் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் உத்தியையே ஹக்கீம் கடைப்பிடித்து வருகிறார்.

இதனையே அவர் கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும் கடைப்பிடித்தார் என்று முஜீபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.

TAGS: