விக்னேஸ்வரன், பிரபாகரனின் மறு அவதாரமாம்!- சிங்கள எழுத்தாளர் சமில லியனகே

vikneswaran-150x125பிரபாகரனின் மறு அவதாரமாகவே இன்று விக்கினேஸ்வரன் உருவெடுத்துள்ளதாக சிங்கள எழுத்தாளர் சமில லியனகே தெரிவித்துள்ளார்.

பொதுபலசேனாவின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விக்கினேஸ்வரனின் செய்கைகளும் பேச்சுக்களும் திருப்தி தருவதாக இல்லை என்று கூறிப்பிட்ட சமில லியனகே இவரை ஆரம்பத்திலிருந்தே கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புத்த பிக்குகள் ஜனாதிபதியிடம் இது தொடர்பாக கோரிக்கை விடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

2012 கணக்கெடுப்பின்படி இலங்கையில் எட்டு மாவட்டங்களில் பௌத்தர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் வடமேல் மாகாணத்தில் இது அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

சிங்களவர்களை அழிக்க வேண்டுமானால் சிங்களத் தன்மையை இல்லாமற் செய்ய வேண்டும் என்று இன்றைய ஆட்சியாளர்கள் பௌத்த பாரம்பரியத்தையும் பழமையையும் ஏனையவருக்கு விற்று வருகின்றனர் எனவும் குற்றம் சுமத்தினார்.

யுத்தத்தை வெற்றி கொள்ள உதவிய நாடு இந்தியா அல்ல என்று தெரிவித்த லியனகே எமது இராணுவ வீரர்களின் முயற்சியே வெற்றி பெற்றுத் தந்தது எனவும் குறிப்பிட்டார்.

TAGS: