உதவி தேவையா, ஓரிட நெருக்கடிகால சேவை மையத்துக்கு வாருங்கள்

1-afifகுடும்ப வன்செயல்களுக்கு ஆளானவர்கள் ஓரிட நெருக்கடிகால சேவை மையத்தில் தேவையான உதவிகளைப் பெறலாம். இச்சேவை மையங்கள் நாடு முழுக்க உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் அமைந்துள்ளன.

1997-இலிருந்து செயல்பட்டுவரும் அச்சேவை மையங்கள் பற்றி பெரும்பாலோர் அறிந்திருக்கவில்லை என பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் அவிவ் பஹார்டின் கூறினார்.

“குடும்ப வன்செயல்களைக் கையாளும் வழிவகை அறிந்த தேர்ச்சிபெற்ற ஆள்கள் அங்கு இருக்கிறார்கள்”, என்றாரவர்.