அரசாங்கம் வகுத்த பாதையில் செல்லுங்கள் என வேதாவுக்கு நஜிப் அறிவுரை

najibசெனட்டர் பி வேதமூர்த்தி இப்போது அரசாங்கத்தில் ஒர் உறுப்பினர். அதனால்  அவர் அரசாங்கம் வகுத்த பாதையில் செல்ல வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

“அரசாங்க உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் அரசாங்கம் வகுத்த பாதையைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் ஒரே குரலாக ஒலிக்க வேண்டும்,” என நஜிப்  புத்ராஜெயாவில் நிருபர்களைச் சந்தித்த போது சுருக்கமாகத் தெரிவித்தார்.

போலீஸ் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பும் அறிக்கைகளை பி வேதமூர்த்தி வெளியிட்டதைத் தொடர்ந்து அவர் பதவி துறக்க வேண்டும் என மூன்று அமைச்சர்கள் கேட்டுக் கொண்டுள்ள வேளையில் நஜிப்பின் அறிக்கையும் வெளியாகியுள்ளது.

பிரதமர் துறையில் ஒர் அமைச்சராக நியமிக்கப்படுவதற்காக அண்மையில் வேதமூர்த்தியை நஜிப் நேரடியாகத் தேர்வு செய்தார்.