குண்டர்களுக்கிடையில் இடத்துக்காக நடந்த மோதலில் ஜம்பு கேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்

1 gangநேற்று ஈப்போவில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் ஆகாயப்படை பணியாளர் எஸ்.ஜம்புகேசன்,39, குண்டர் கும்பல்களுக்கிடையில் இடத்துக்காக நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார் எனக் கூறப்பட்டுள்ளது.

அவர் நேற்று காலை மணி 7.15க்கு முகமூடி அணிந்த துப்பாக்கிக்காரனால் சுட்டுக்கொல்லப்பட்டார் என த ஸ்டார் அறிவித்திருந்தது.

“அவர் கொல்லப்பட்டதற்கு கேங் 04-க்கும் 08-க்குமிடையில் இடத்துக்காக நடந்த மோதலே காரணம் என்று நம்புகிறோம்”, என பேராக் சிஐடி தலைவர் முகம்மட் ஜூரைடி இப்ராகிம் கூறினார்.