குண்டர் கும்பலுடன் பிஎன் தலைவர்கள் மூவருக்கு என்ன தொடர்பு?

1 letterகுற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் “கேங் 36” ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் பிஎன் தலைவர்கள் மூவர் கலந்துகொண்டதாகக்  கூறும் அனாமதேய கடிதம் குறித்து   ஒரு என்ஜிஓ போலீசில் புகார் செய்துள்ளது.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எழுதப்பட்ட அக்கடிதத்தை முகநூலில் கண்டெடுத்ததாகக் கூறிய தமிழர் நடவடிக்கைப் படையின் செயல்குழு உறுப்பினர் எஸ்.முரளி, “கேங் 36” ஒரு சட்டவிரோத அமைப்பு என்பதால்  அதில் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டது ஏன் என்று  விசாரித்தறிய  வேண்டும்   எனப் போலீசைக் கேட்டுக்கொண்டார்.

அந்நிகழ்வு 2011 டிசம்பர் 3-இல், ஸ்ரீகெம்பாங்கானில் உள்ள த மைன்ஸில் நடைபெற்றதாக ஊடகங்களிடம் முரளி விநியோகம் செய்த அக்கடிதம் குறிப்பிட்டது.