ஐஜிபி: பாக் சமட் போலீஸ் கண்ணில் படாமல் ‘பதுங்கி விட்டார்’

samadஆகஸ்ட் 30-இல், டாட்டாரான் அருகே, சாங் சாகா மலாயா கொடி பறக்கவிடப்பட்டதன் தொடர்பில் விசாரணைக்கு உதவ போலீஸ் தேசிய இலக்கியவாதி ஏ.சமட் சைட்டைத் தேடி வருகிறது.

நேற்றிரவு அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது சமட் அங்கில்லை என இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார்.

அக்கொடி பறக்கவிடப்பட்டதன் தொடர்பில் ஹிஷாமுடின் ரைஸ், ஆடம் அட்லி ஆகியோரைக் கைது செய்த பின்னர் போலீசார் சமட்டைத் தேடிச் சென்றார்கள். கைது செய்யப்பட்ட அவ்விருவரும் இன்று அதிகாலை 3 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.