இறை இல்லங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனக் கூறும் விதிமுறை டிபிகேஎல்-இடம் இல்லை

balaஇறை இல்லங்களில் அமலாக்க நடவடிக்கைகளில் ஈடுபடும் கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள் அங்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை வரையறுக்கும் சிறப்பு விதிமுறை எதுவும் இல்லை என்கிறது கூட்டரசு பிரதேச அமைச்சு.

அப்படி ஒன்றை டிபிகேஎல்-இடம் பேசித்தான் உருவாக்க வேண்டும் என்று அதன் துணை அமைச்சர் டாக்டர் லோக பால மோகன் கூறினார்.

“அவர்களின் இயக்க நடைமுறை (SOP) பொதுவானது. ஆலயங்களுக்கு என்று தனி விதிமுறை கிடையாது. டிபிகேஎல் ஆள்கள் (ஆலயங்களுக்குள்) காலணியுடன் செல்வதாக புகார்கள் உள்ளன. அதை ஒப்புக்கொள்கிறோம்”, என்றாரவர்.