பாகிஸ்தான் கடற்படை தளபதி சுட்டுக்கொலை

Shootingபாகிஸ்தான் கடற்படை தளபதி நசீம் அடையாளம்  தெரியாத நபர்களால் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

கராச்சி ஸ்டேடியம் ரகமத்துல்லா ரோட்டில் உள்ள அவர்களது வீட்டருகே காரில் சென்ற போது அவர்களை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில், இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் உள்ளவர்கள், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நசீம் இறந்தார். குண்டுகள் துளைக்கப்பட்ட காரை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

கராச்சியில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த அதிபர் நவாஸ்ஷெரிப் சிறப்பு அமைச்சரவைக்

கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், இந்த வன்முறை சம்பவம் நடந்துள்ளது.