‘உடைக்கப்பட்ட’ கோயிலைக் கண்டு இராமசாமி ஆத்திரம்

koil‘தலைநகரில், 100 ஆண்டு  பழமைவாய்ந்த  ஸ்ரீமுனீஸ்வரர்  காளியம்மன்  கோயிலுக்கு வருகை புரிந்த  பினாங்கு துணை முதலமைச்சர் II  பி.இராமசாமி,   அப்பகுதியில்  ஒரு கடைதான்  உடைக்கப்பட்டது,  விக்கிரங்கள்  சேதப்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ள கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்சூரை  “அப்பட்டமான பொய்யர்” என்று சாடினார்.

“தெங்கு அட்னான் அமைச்சராக இருப்பதற்குத் தகுதியற்றவர். அவருக்குத் துணையாக உள்ள லோக பால மோகனும் அப்படியே.

“கோயிலில் நடந்ததை லோகபாலா நன்கு அறிவார். இந்த அடாவடித்தனம்  அவசியம்தானா,  ஆலய நிர்வாகக் குழுவுடன் பேசி அமைதியாக  தீர்வு கண்டிருக்க முடியாதா?”, என்றவர் காட்டமாக வினவினார்.