தமிழ் மக்கள் சர்வதேச விசாரணை தவிர்ந்த வேறு எதனையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்.பதிவு இணையத்திற்கு அவர் வழங்கிய செவ்வியினில் சர்வதேச விசாரணை வேண்டுமென்ற எமது கட்சியின் நிலைப்பாட்டினில் மாற்றமில்லை.
https://youtu.be/T7LsvCjnNsQ
ஆனால் சில தமிழ் தரப்புக்கள் சர்வதேச தரத்திலான உள்ளகவிசாரணையென்பதிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.ஆனால் அது மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும்.எந்தவகையினில் மக்கள் நம்பிக்கை கொண்டு உள்ளக விசாரணையினில் சாட்சியமளிப்பதெனவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக இலங்கையிலுள்ள எத்தரப்பும் தொடர்புபடாததாக விசாரணைகள் இடம்பெற்றால் மட்டுமே மக்கள் நம்பிக்கை கொள்வார்களெனவும் கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.
-http://www.pathivu.com

























சர்வ தேச விசாரணை.அது நடக்கவே நடக்காது.எங்கள் வட தொப்புள்கொடி உறவு இந்தியா இருக்கும் வரை எங்களை யாரும் ஒன்னும் பு……. முடியாது.