அன்வார், முகைதீனுடன் விவாதம் செய்ய மறுக்கிறார் பிரதமர் இஸ்மாயில்

15வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரிசான் நேசனல், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிகாத்தான் நேசனல் ஆகிய கட்சிகளின் பிரதமர் வேட்பாளர்களிடையே விவாதம் நடத்த அன்வார் இப்ராஹிமின் அழைப்பை பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நிராகரித்துள்ளார். விவாதங்கள் மலேசியாவின் அரசியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதி அல்ல என்று இஸ்மாயில் கூறினார்.…

ஆசியாவை சார்ந்த முதலாவது பிரிட்டன் பிரதமராக ரிஷி சூனக்

பிரிட்டன் பிரதமராகும் முதலாவது பிரிட்டிஷ் ஆசியராக ரிஷி சூனக் வரலாறு படைத்துள்ளார். அவர் புதிய கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக வாக்களித்து தேர்வான பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்னதாக, கடந்த கோடை காலத்தில் கட்சிக்குழுவுக்கு தலைமை தாங்கும் போட்டியில் சூனக் தோல்வியுற்ற பிறகு, லிஸ் டிரஸ் கன்சர்வேட்டிவ் கட்சியின்…

எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

மலேசியாஇன்று -வின் ஆதரவாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! நமது பண்பாடு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற இலக்கணமற்ற     சூழலில் வாழ்வதால், அனுசரித்துச் செல்வது என்ற வகையில் எதையும் தாங்கும் இதயமாக நாம் மாறிக்கொண்டுருப்பதால், இதயத்தின் துடிப்பும் அதிகமாகி வருகிறது! இந்த தீபாவளி…

சுங்கை சிப்புட்டில் விக்னேஸ்வரன் போட்டியிடுவாரா?

இராகவன் கருப்பையா - எதிர்வரும் பொதுத் தேர்தலில் பேராக்கின் சுங்கை சிப்புட் தொகுதியில் ம.இ.கா.வை பிரதிநிதித்து யார் போட்டியிடுவார் எனும் கேள்வி தற்போது மீண்டும் எழுந்துள்ளது. ஒரு காலத்தில் ம.இ.கா.வின் இரும்புக் கோட்டையாக விளங்கிய அத்தொகுதியில் அதன் தலைவர் விக்னேஸ்வரன் போட்டியிடுவார் என கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலிருந்து…

பட்டது போதும் வேண்டாம் மகாதீர் – பாக்காத்தான் ஹரப்பான்

பெஜுவாங் மற்றும் அதன் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது இல்லாமல் 15வது பொதுத் தேர்தலை (GE15) எதிர்கொள்ள பக்காத்தான் ஹராப்பான் தயாராக உள்ளது என்று சைபுடின் நாசுதியோன் கூறினார். அந்த ஹராப்பான் பொதுச்செயலாளரைத் தொடர்பு கொண்டபோது, ​​ ஒத்துழைக்க கோரும் மகாதீரின் அழைப்பை தனது கூட்டணி மதிப்பதாகக் கூறினார்.…

வீரமான விவேக கஸ்தூரி பட்டு,  விட்டு கொடுக்கிறார்

கஸ்தூரி பட்டு 2013 முதல் பினாங்கில் உள்ள பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதியின் நடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர், இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். மறைந்த மூத்த டிஏபி தலைவர் பி பட்டுவின் மகளான அவர்,  தான் புதிய தலைவர்களுக்கு இடம் கொடுக்க விரும்புவதாகவும், தான் வேட்பாளராக…

நவம்பர் 19-ம் தேதி பொதுத்தேர்தல்  

15வது நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 19ஆம் தேதி சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. நவம்பர் 5-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாளாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரச்சார காலம் 14 நாட்கள் நீடிக்கும். முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 15ஆம் தேதி நடைபெறும். பெர்லிஸ், பேராக் மற்றும் பகாங் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் மற்றும்…

அரசாங்க ஊழியர்கள் யாருக்கு வாக்களிப்பர்?

இராகவன் கருப்பையா - நம் நாட்டின் அரசாங்க ஊழியர்கள் காலங்காலமாக தேசிய முன்னணிக்குதான் விசுவாசமாக இருந்து வந்துள்ளனர். ஒவ்வொரு பொதுத் தேர்தலின் போதும் கிட்டதட்ட எல்லா அரசு ஊழியர்களின் வாக்குகளும் தங்கு தடையின்றித் தங்களுக்குக் கிடைக்கும் எனும் மமதையில் இருந்துவந்த அக்கூட்டணிக்கு 14ஆவது பொதுத் தேர்தலில் எதிர்பாராத வகையில் அதிர்ச்சி…

இஸ்மாயில் சப்ரி அரசியலமைப்பை இழிவுபடுத்தக் கூடாது

அட்டர்னி ஜெனரலின் அரசியலமைப்பு நிலைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாக இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீது லிம் கிட் சியாங் கடுமையாகச் சாடினார். ‘My Story: Justice in the Wilderness’ என்ற தலைப்பில் உள்ள அவரது புத்தகத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பாக, டாமி தாமஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, அட்டர்னி-ஜெனரல்…

இந்திய அமைப்புகளின் 15ஆம் பொதுத் தேர்தலுக்கான கோரிக்கைகள்

‘இந்தியர்கள் 25’ (I25) என்ற இந்திய சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு 15 -வது பொதுத்தேர்தலை முன்னிட்டு இந்திய சமூக மேம்பாட்டுக்கான தேர்தல் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கை மனு அனைத்து அரசியல் தரப்பினர்களிடமும் சமர்பிக்கப்படும் என்று கூறுகிறார் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் கருப்பையா. “எங்களின் நோக்கம் இந்திய…

சார்லஸ் சந்தியாகோவே மீண்டும் கிள்ளானுக்கு வேட்பாளராக வேண்டும்

கிள்ளான் மக்களுக்காக சிறப்பாக சேவைபுரியும் சார்லஸ் சந்தியாகோ மீண்டும் கிள்ளானுக்கே வேட்பாளராக தேர்ந்துடுக்கப் படவேண்டும் என்று கிள்ளான் இந்திய அரசு சார இயக்கங்கள் சூளுரைத்தன. கிள்ளான் தொகுதியில் கடந்த 3 தவணைகளாக நாடாளுமன்ற உறுப்பினராக சார்லஸ் சந்தியாகோ தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்வட்டார மக்களுக்கு அவரின் ஒப்பற்ற சேவையை ஆற்றியுள்ளார். இவரின்…

ஒருமைப்பாட்டு நிகழ்வில் இஸ்மாயில் சப்ரி – ஜஹிட் ஹமிடி ஒன்றாக…

அம்னோவின் இரண்டு போட்டி முகாம்களும், அதாவது பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, இன்று ஒன்றாக இணைந்து, அவர்களின் விரோதத்தை புதைக்க தயாராக இருப்பதாக தெரிகிறது. பார்லிமென்டை எப்போது கலைப்பது என்பது உட்பட பல்வேறு விஷயங்களில் பிளவுபட்டிருந்த இரு பிரிவு தலைவர்களும்…

சேவை மனம் கொண்ட சார்ல்ஸ் சந்தியாகோவுக்கு தொகுதி வழங்கப்பட வேண்டும்…

சிறந்த முறையில் மக்களுக்கு சேவை செய்த பிரதிநிதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அவ்வகையில் கிள்ளான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று தவணைகள் செயலாற்றிய சார்ல்ஸ் சந்தியாகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஐ25 என்ற இந்திய அரசு சாரா இயக்கங்களின் ஒன்றியம் (I25) ஜன…

அன்வார்: இனி ஏமார மாட்டோம், ஹராப்பானுக்கு புதிய ‘தலைவர்’ இருக்கிறார்

தற்போது கூட்டணிக்கு ஒரு புதிய "தலைவர்" இருப்பதால், பக்காத்தான் ஹராப்பான் செயலாக்கம் பற்றி மக்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை, என்றார் அன்வார் இப்ராகிம். ஹராப்பான் தலைவரின் கூற்றுப்படி, கூட்டணியில் இனி "பழையன" இல்லை, மேலும் முந்தைய வாக்குறுதிகள் முடிந்தவரை நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார். “ஹரப்பான் 22 மாதங்கள் மலேசியாவை…

15வது பொது தேர்தல்: பெர்சத்து – ஹராப்பான் கூட்டணி வேலை…

வரவிருக்கும் 15வது பொதுத் தேர்தலில்  பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து செயல்படப் போவதில்லை என்பதை பெர்சத்து உறுதிப்படுத்தியது. ஹராப்பான் கவுன்சில் தங்களுடன் ஒத்துழைக்கப் போவதில்லை என்ற முடிவையும் பெர்சது கவனத்தில் எடுத்துள்ளதாக கட்சியின் தலைவர் முகைதின் யாசின் தெரிவித்தார். "பெர்சாத்து மற்றும் ஹராப்பான் இடையேயான ஒத்துழைப்பு குறித்த அறிக்கையைப் பொறுத்தவரை,…

நான் வாழும் வரை போராடுவேன் – டாக்டர் மகாதீர்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், 15வது பொதுத் தேர்தலில் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் தனது முடிவு உறுதி என்றார். "நான் வாழும் வரை, நான் தொடர்ந்து போராடுவேன்" என்று அந்த பெஜுவாங் தலைவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாயன்று, 2018 இல்…

‘கிரிமினல் குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க, தேர்தலில் வெல்லுங்கள்’ – பெர்லிஸ் முஃப்தி…

பெர்லிஸ் முப்தி முகமது அஸ்ரி ஜைனல்(Perlis Mufti Mohd Asri Zainal) கிரிமினல் குற்றச்சாட்டுகளில் இருந்து  தாக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகத் தேர்தலில் வெற்றி பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஒரு அரசியல்வாதியின் பேச்சால் "திகைத்துப் போயுள்ளார்". "ஒரு அரசியல்வாதி எப்படி வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார் (அவரது அரசியல் கட்சி/கூட்டணி) அவர்கள்மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத்…

‘நிலைத்தன்மை மற்றும் செழுமை’ என்பது BN அறிக்கையின் கருப்பொருள்

15வது பொதுத் தேர்தலுக்கான "நிலைத்தன்மை மற்றும் செழுமை" என்பது அதன் தேர்தல் அறிக்கையின் முக்கிய கருப்பொருள் என்பதை BN உச்ச கவுன்சில் ஒப்புக் கொண்டுள்ளது. நேற்றிரவு கோலாலம்பூரில் உள்ள மெனாரா டத்தோ ஓனில் நடைபெற்ற உச்ச கவுன்சில் கூட்டத்தில் இந்த விசயம் ஒப்புக் கொள்ளப்பட்டதாக BN பொதுச்செயலாளர் ஜாம்ப்ரி…

வாக்காளர்கள் ‘லஞ்சத்தை’ நிராகரித்தால் அம்னோ தோற்றுவிடும் – மகாதீர்

அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிரான ஒரு மறுப்பில், டாக்டர் மகாதீர் முகமது, வாக்காளர்கள் இலஞ்சத்தை நிராகரித்தால் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அம்னோ தோல்வியடையும் என்று கூறினார். புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில், முன்னாள் பிரதம மந்திரி தான் முன்னர் வெளியிட்ட ஒரு அறிக்கையை…

பக்காத்தான் ஹராப்பான் ஒருபோதும் பின்வாங்காது, மீண்டும் போராடுவோம் – அன்வார்   

15வது பொதுத் தேர்தலுக்கு கூட்டணிகள் தயாராக இருப்பதாகவும், கடந்த தேர்தலில் மலேசியர்கள் தங்களுக்குக் கொடுத்த ஆணையை மீண்டும் பெறுவோம் என நம்புவதாக பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். “நான் தெளிவாக சொல்வது என்னவென்றால், பக்காத்தான் ஹராப்பான் ஆனது GE15க்கு தயாராக உள்ளது. சட்ட உரிமைகளைத் திருடியவர்களுக்கு…

நாடாளுமன்றம் கலைப்பு, 60 வது நாட்களுக்குள் 15 -வது பொதுத்தேர்தல் 

15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார். அதாவது 60 நாட்களுக்குள் நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்படும். "கூட்டாச்சி அரசியலமைப்பின் உறுப்புரை 40(2)(b) மற்றும் பிரிவு 55(2) க்கு இணங்க, யாங் டி-பெர்டுவான் அகோங் இன்று, அக்டோபர் 10,…

ஆயுதங்கள் வாங்க அரசியல்வாதிகள் தேவையில்லை – ரஃபிசி

இராணுவக் கொள்முதல் மறுசீரமைக்கப்பட வேண்டும், மேலும் அரசியல்வாதிகள் அந்த செயல்முறையிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்று பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் துறை இரட்டை முனைகள் கொண்ட வாள் என்று அவர் விவரித்தார். அதற்கான நிதி அரசியல் வாதிகளுக்கு ஒரு பணப்புதையலாக மாறிவிட்டது என்றும்…

“பணக்காரர்களுக்கான பட்ஜெட்” எம்.பி சுட்டிக்காட்டுகிறார்

இன்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜிஸின் பட்ஜெட் 2023 உரையில் பல நன்மைகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தாலும், சுபாங் எம்.பி. வோங் சென், அரசாங்கம் உண்மையில் நலன் மற்றும் மானியங்களுக்குக் குறைவாகவே செலவிடுகிறது என்று சுட்டிக்காட்டினார். அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் நிதிய கண்ணோட்டத்தை மேற்கோளிட்டு, அரசாங்கம் மானியங்கள் மற்றும்…