அம்னோ உறுப்பினர்களுக்கு பொதுத் தேர்தலுக்கு முந்திய விளக்கக் கூட்டங்கள்

அம்னோ கிளை, தொகுதிக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நடப்பு விவகாரங்கள் மீது  ஒவ்வொரு மாநிலத்திலும் அம்னோ பிரச்சார, தகவல் பிரிவு "சிறப்பு" விளக்கக் கூட்டங்களை நடத்துகிறது. 13வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் ஒரு பகுதியாக அந்தக் கூட்டங்கள் அமைவதாக அந்தப் பிரிவின் தலைவர் அகமட் மஸ்லான் சொன்னார். அனைத்து…

சுமத்ராவில் காடுகள் எரிவது பற்றி கோலாலம்பூர் கவலை தெரிவித்துள்ளது

சுமத்ராவில் அதிகமான வெப்பத்துடன் 600 இடங்களில் காடுகள் எரிவது குறித்து கவலை தெரிவிக்கும் கடிதம் ஒன்றை மலேசியா இந்தோனிசியாவுக்கு அனுப்பியுள்ளது. துணைக்கோளம் வழியாக பிடிக்கப்பட்ட தோற்றங்கள் காடுகள் எரியும் இடங்களைக் கண்டு பிடித்துள்ளன. இந்தோனிசிய சுற்றுச்சூழல் அமைச்சர் பேராசிரியர் டாக்டர் குஸ்டி முகமட் ஹட்டாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அந்தக்…

தொகுதிகளை மாற்றிக் கொள்ள மஇகா தயார், பழனிவேல்

அடுத்த பொதுத் தேர்தலில் தனக்கு ஒதுக்கப்படும் இடங்களை மற்ற பிஎன் உறுப்புக் கட்சிகளுடன் மாற்றிக் கொள்வதற்கு மஇகா தயாராக இருப்பதாக அதன் தலைவர் ஜி பழனிவேல் கூறியிருக்கிறார். மாற்றிக் கொள்வதற்கு நல்ல காரணம் இருந்தாலும் பிஎன் அந்த இடத்தில் வெற்றி  பெறுவதற்கு உதவும் என்றாலும் மஇகா எந்தத் தொகுதியையும்…

பக்காத்தான் இந்தியர் ஆதரவு குறித்து அக்கறை காட்டவில்லை

பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியலில் இரு தரப்பையும் சார்ந்த அரசியல் கட்சிகள் வாக்குகளைக் கவருவதற்காக வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அன்பளிப்புக்களையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் தங்கள் சமூகம் கவனிக்கப்படவில்லை என இந்தியத் தலைவர்கள் ஒலமிடுகின்றனர். 2008 பொதுத் தேர்தலில் பொருட்படுத்த வேண்டிய சக்தியாக இந்திய வாக்காளர்கள்…

ஹாடி: நாடு காலனித்துவ ஆட்சியில் இருந்ததே இல்லை எனக் கூறுவது…

மலேசியா ஒரு போதும் காலனித்துவ ஆட்சியின் கீழ்  இருந்ததே இல்லை என வரலாற்று ஆசிரியர் ஒருவர் சொல்லியிருப்பதை பாஸ் தலைவர்கள் கடுமையாக குறை கூறியுள்ளனர். அத்தகைய கருத்துக்கள் மக்களை தவறாக வழி நடத்தும் நோக்கம் கொண்டவை என்றும் அவர்கள் வருணித்தனர். அத்தகைய "சர்ச்சைகள் மக்களை முட்டாளாக்குவதற்காக" இப்போது எழுப்பப்படுகின்றன.…

மாருதி சுஸுக்கி நிறுவன கதவடைப்புக்கு போலீஸ் ஆதரவு

இந்தியாவின் மிகப் பெரிய மோட்டார் கார் உற்பத்தியாளரான மாருதி சுஸுக்கி அதன் மனெசார் கார் உற்பத்தி தொழிற்சாலையை கதவடைப்பு செய்துள்ளது. இதன் விளைவாக ஆகஸ்ட் 29 லிருந்து 3,000 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல இயலாமல் இருக்கின்றனர். அத்தொழிற்சாலை ஊழியர்கள் புதிதாக அமைத்த மாருதி சுஸுக்கி ஊழியர்கள்…

பினாங்கு-எதிர்ப்பு துண்டறிக்கை குறித்து போலீஸ் புகார்

பினாங்கு மாநில அரசை இழித்துரைக்கும் துண்டறிக்கைகள் குறித்து பினாங்கு பிகேஆர் இளைஞர் பகுதி போலீசில் புகார் செய்துள்ளது.அந்தத் துண்டறிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை பெர்மாத்தாங் பாவில் நடைபெறும் தேசிய ஹரி ராயா விருந்துபசரிப்பின்போது விநியோகிக்கப்படுவதற்காக தயாரிக்கப்பட்டவையாக இருக்கலாம் என்று அது கருதுகிறது. அப்புகாரைச் செய்த பிகேஆர் இளைஞர் தலைவர் அமிர் முகம்மட்…

மக்களுக்கு முன்னுரிமை என்பதற்குப் புதிய அர்த்தம்

“அரசாங்கம் எதையும் விட்டு வைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் வரி விதிக்கிறது. 'Rakyat didahulukan' (மக்களுக்கு முன்னுரிமை) என்பதற்கு எதுவானாலும் முதலில் பாதிக்கப்படுவோர் மக்கள் என்பதுதான் புதிய பொருள்.”       பிரதமர்: சேவைக்கட்டண வரி அரசின் முடிவல்ல; நிறுவனங்கள் அதை மறு ஆய்வு செய்ய வேண்டும் ஒங்: தொலைத்தொடர்பு…

தேசியப் பதிவுத்துறையின் புள்ளிவிவரக் களஞ்சியம் ஏன் மூன்று ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை?

 "இசி என்ற தேர்தல் ஆணையம் என்ஆர்டி என்ற தேசியப் பதிவுத் துறையின் புள்ளி விவரங்களை  நம்பியிருக்கும் வேளையில் என்ஆர்டி பதிவுகளிலிருந்து இசி விவரங்கள் எப்படி மாறுபட்டன?"       என்ஆர்டி தன்னை தற்காத்துக் கொள்கிறது. காலம் தாழ்த்திய புள்ளி விவரக் களஞ்சியம் மீது பழி போடுகிறது டிகேசி:…

நஜிப் வருகையின்போது என்யுபி தொழிற்சங்கம் மறியல்

இன்று சுமார் 60 தேசிய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (NUBE) உறுப்பினர்கள் கோலாலம்பூரில் மேபேங்க் தலைமையகத்தின் முன் பதாகைகளை ஏந்திக்கொண்டும் கொம்போங் ஒலியுடனும் மறியலில் ஈடுபட்டனர். மேபேங்க் உறுப்பினர்களுக்கு போனஸ் மற்றும் மேபேங்க் ஊழியர்களுக்கு மட்டுமான அதிகாரிகளற்ற பணியாளர்கள் சங்கம் (In-house union) அமைக்கப்பட்டிருப்பது பற்றிய  விவகாரங்களில் மேபேங்கின்…

பேராசியர் மன்றம்: இடதுசாரிகள் சுதந்திரப் போராட்டவாதிகள் அல்லர்

தேசிய பேராசிரியர் மன்றம் (எம்பிஎன்) இன்று புக்கிட் கெப்போங் சர்சையில் இறங்கி இடதுசாரி இயக்கம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடவில்லை என்று வலியுறுத்தியது. மாறாக, அந்த மன்றம் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியையும் (சிபிஎம்)உள்ளடக்கிய இடதுசாரி இயக்கத்தினரை "துரோகிகள்" என்று கூறியது. ஏனென்றால் அந்த இயக்கம் மலாய் ஆட்சியாளர்களை அகற்றி விட்டு…

செய்தியாளர்களைப் பாதுகாக்க பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்த வேண்டும், சார்ல்ஸ்

மலேசிய ஊடகப் பணியாளர்களுக்கு  வழங்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பது பெர்னாமா டிவி ஒளிப்பதிவாளர் நோராம் பைசூல்  முகமதின் மரணம் மூலம் மிக தெளிவாக தெரிகிறது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார். அண்மையில் ஆப்பிரிக்க அமைதிகாப்பு படை மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கி…

செக்ஸ் வீடியோ தொடர்பில் ஐஜிபி-இன் வாதம் புரியவில்லையே, தியான் சுவா

டத்தோ டி செக்ஸ் வீடியோ தொடரில் போலீசில் பொய்ப்புகார் செய்த பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்று படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் அறிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா. செக்ஸ் வீடியோவில் இருப்பவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத…

எஸ்என்எஸ் என்ற சமூக இணையத் தளங்களுக்கு புதிய வழிகாட்டிகள்

சைபர் செக்யூரிட்டி மலேசியா ( CyberSecurity Malaysia )என்று அழைக்கப்படும் அமைப்பு சமூக இணையத் தளங்களுக்கு சிறந்த நடைமுறைகள் என்னும் தலைப்பில் புதிய இணைய வழிகாட்டிகளை அறிமுகம் செய்துள்ளது. சைபர் செக்யூரிட்டி மலேசியா என்பது இணையப் பாதுகாப்புத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த அமைப்பாகும். அது அறிவியல் தொழில்நுட்ப, புத்தாக்க…

“ஆஸ்திரேலியாவில் அதிகச் செலவாகும் என்பதால் லினாஸ் மலேசியாவைத் தேர்வு செய்தது”

லினாஸ், தனது அரிய மண் தொழில் கூடத்தை அமைப்பதற்கு மலேசியாவை தேர்வு செய்திருப்பதற்கான காரணத்தை தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்று அந்த மேற்கு ஆஸ்திரேலிய  சுரங்க, பெட்ரோலிய அமைச்சர் நோர்மன் மூர் கூறுகிறார். ஆஸ்திரேலியா தயாரிப்புத் தொழில்களுக்கும் கீழ் நிலை நடவடிக்கைகளுக்கும் அதிகச் செலவு பிடிக்கும் நாடு…

அரசாங்கம் உயர் கல்வியைத் தாராளமாக்கியது சரியான நடவடிக்கை என்கிறார் பிரதமர்

உயர் கல்வித் துறையை தாராளமாக்குவது என அரசாங்கம் 1996ம் ஆண்டு எடுத்த முடிவு சரியானது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கூறியிருக்கிறார். அதன் விளைவாக அதிகமான மாணவர்கள் உள்நாட்டில் உயர் கல்வியைத் தொடருவதற்கு வகை செய்யப்பட்டது என அவர் சொன்னார். "1996ம் ஆண்டுக்கான தனியார் உயர்…

சுஹாக்காம்: மனித உரிமைகள் மீது நாடாளுமன்ற சிறப்புக் குழுவை அமையுங்கள்

இந்த நாட்டில் காணப்படுகிற பல்வேறு மனித உரிமைப் பிரச்னைகளை ஆய்வு செய்வதற்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைப்பது பற்றி அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என சுஹாக்காம் என்னும் மலேசிய மனித உரிமை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த ஆணையத்தின் 12வது ஆண்டு நிறைவை ஒட்டி விடுத்துள்ள செய்தியில் அதன்…

இடம் கொடுங்கள்: செய்தித்தாள்களிடம் பெர்சே கோரிக்கை

தேர்தல் சீரமைப்புக்குப் போராடும் கூட்டமைப்பான பெர்சே 2.0, மைய நீரோட்ட ஊடகங்களில் தன்னைப் பற்றி எதிர்மறையான செய்திகளே வந்துகொண்டிருப்பதால்  வாராந்திர பத்தியொன்றை எழுதி தன் கருத்துகளையும் எடுத்துரைக்க வாய்ப்பளிக்க வேண்டும் என அச்சு ஊடக ஆசிரியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அம்பிகா ஸ்ரீநிவாசனைத் தலைவராகக்…

இசி சவால்: குடியுரிமை அல்லாதாருக்கு வாக்குரிமையா?, நிரூபியுங்கள்

குடிமக்கள்-அல்லாதவருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருப்பதாகக் கூறிக்கொள்ளும் பாஸ் இளைஞர் பகுதி அதனை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் (இசி) சவால் விடுத்துள்ளது. “அதன் தொடர்பில் பெயர் பட்டியலையும் ஆவணங்களையும் காட்டிக்கொண்டிராமல் சம்பந்தப்பட்ட ஆள்களையும் கொண்டுவந்து நிறுத்த வேண்டும்”, என்று இசி துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார்…

ஜோகூரில் பக்காத்தான் தொகுதி ஒதுக்கீட்டில் தேக்கநிலை

ஜோகூரில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு மீது பிகேஆருக்கும் டிஏபிக்குமிடையில் மாநில அளவில் நடைபெற்ற பேச்சுகள் தேக்கநிலையை அடைந்திருப்பதுபோல் தெரிகிறது. பிகேஆர், தான் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாகக் கூறி சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க மறுக்கிறது என்று டிஏபி கூறியது. “பிகேஆர் அதிகப்படியான தொகுதிகளைக் கோருவதால் பிரச்னை எழுந்துள்ளது”, என…

ஜோகூர் மந்திரி புசார் அவமதிக்கிறார், பேராசிரியர் அப்துல் அசிஸ்

மாட் இண்ட்ரா ஒரு சுதந்தர போராட்ட வீரர் இல்லை என்றதன் மூலம் ஜொகூர் மந்திரி புசார் டத்தோ அப்துல் கனி அவரை அவமதிக்கிறார் என சட்டத்துறை பேராசிரியர் அப்துல் அசிஸ் பாரி தெரிவித்துள்ளார். இத்தனைக்கும் 2004-ல் ஜோகூர் அரசே வெளியிட்ட ‘Pengukir Nama Johor’ நூலில் மாட் இண்ட்ரா…

முன்னாள் முதலமைச்சர் கோ சூ கூன் கூட்டரசு பிரதேசத்தில் போட்டியிடலாம்

கெரக்கான் தலைவர் கோ சூ கூன், கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடக் கூடும் எனக் கூறப்படுகிறது. கெரக்கான் கட்சி வட்டாரங்கள் அதனைத் தெரிவித்தன. கூட்டரசுப் பிரதேச கெரக்கான் தலைவருமான கோ, பத்து, சிகாம்புட் அல்லது கெப்போங்கில் நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது. அந்தத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு…