த.தே.கூட்டமைப்பின் பூநகரி அமைப்பாளரை தேடித் திரிந்த இராணுவம்: பீதியில் அவரது குடும்பம்!

army_004கிளிநொச்சி பூநகரிப் பகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமைப்பாளர் இராஜரட்ணம் கோணேஸ்வரன் என்பவர் அப்பகுதி இராணுவத்தினரால் தேடப்பட்டுள்ளார்.

கடந்த 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் கிராஞ்சி சிவபுரம் பகுதியில் அமைந்துள்ள அவரது தாயாரின் வீட்டுக்குச் சென்ற இராணுவத்தினர், “உமது மகன் எங்கே? எங்கே வேலை செய்கிறார்?, என்ன வேலை செய்கிறார்? அவரது முழுப்பெயர் என்ன?,” எனப் பல கேள்விகளைக் கேட்டதுடன், அவர் வீட்டிற்கு வந்தால் தமக்கு தெரியப்படுத்துமாறும் மிரட்டியுள்ளனர்.

இது போன்ற தேடுதல்களாலும் அச்சுறுத்தல்களாலும் அவரது குடும்பத்தினர் அச்சநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன் அவ்வூர் மக்களும் பதற்றம் அடைந்துள்ளதைக் காணமுடிகிறது.

TAGS: