இந்திய தெருவோர வண்டியில் உணவருத்திய பிரித்தானிய பிரதமர்

david_cameron_india_001பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த வியாழக்கிழமை மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

ஜோகாவில் உள்ள வணிகவியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர், இங்கிலாந்து தூதரக அதிகாரிகளுடன் வர்தான் பஜார் பகுதி வழியாக சென்ற டேவிட் கேமரூனின் பார்வையை தெருவோர வண்டி கடை ஒன்றின் பெயர் பலகை கவர்ந்தது.

இங்கிலாந்தின் முன்னாள் மகாராணியான ‘விக்டோரியா’  என்ற பெயர் கொண்ட அந்த வண்டி கடைக்கு சென்ற அவர் 2 வடைகளை வாங்கி சாப்பிட்டார்.

பின்னர், கடைக்காரரிடம் எவ்வளவு பணம் தர வேண்டும்? என்று கேட்ட டேவிட் கேமரூன் 30 ரூபாயை கொடுத்து விட்டு எவ்வித பந்தாவும் இன்றி நடந்து சென்றார்.

இந்நடவடிக்கையானது பிரதமரின் எளிமையை காட்டுவதாக அமைந்துள்ளது.