இலங்கை தொடர்பில் கமரூன் அணுகுமுறையை ஏற்காத இந்தியா!

jaffna_protest_001இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரின் அணுகுமுறையை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அதிகாரி ஒருவரை கோடிட்டு இந்த செய்தியை இக்கோனொமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் அணுசரணையில் சர்வதேச விசாரணைகளின் அவசியத்தை பிரித்தானிய பிரதமர் தமது விஜயத்தின் போது வலியுறுத்தியிருந்தார்.

இந்தநிலையில் கமரூனை போன்று இலங்கைக்கு சென்று மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்தியா விரும்பவில்லை. அது இந்திய பாணியும் அல்ல என்று இந்திய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இது முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது இந்தியாவின் பேச்சுவார்த்தை மூலமான நடைமுறைகளையும் பாதிக்கும் என்று இந்திய அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

TAGS: