அமெரிக்க பிரேரணைக்கு பல நாடுகள் ஆதரவு! மண்டியிடுவதற்கு இலங்கை தயாராக இல்லை!

usa_indian flagஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை தோற்கடிக்க பல்வேறு நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், சர்வதேச சமூகத்தின் முன் மண்டியிடுவதற்கு இலங்கை தயாராக இல்லை என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.

அமெரிக்க பிரேரணைக்கு எதிராக ஆதரவு திரட்டும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விசேட பிரதிநிதியாக பல்வேறு நாடுகளுக்கு விஜயத்தை மேற்கொண்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக சர்வதேச நாடுகளுக்கு தெளிவுபடுத்தியதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

பிரேரணை தோற்கடிப்பதற்காக இலங்கைக்கு ஆதரவு வழங்க பல நாடுகள் தயாராகவுள்ளன. எனினும் பல நாடுகள் அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்தின் முன் மண்டியிடுவதற்கு இலங்கை தயாராக இல்லை என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா குறிப்பிட்டுள்ளார்.

TAGS: