தாய்லாந்தில் 3 சிறுவர்கள் சுட்டுக் கொலை

patani-darussalamதாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள நராதிவாட் மாகாணத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர்.

பாச்சோ மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு ஒரு முஸ்லிம் குடும்பத்தினர் மசூதியில் இருந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 6,9 மற்றும் 11 வயதுடைய சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். அவர்களின் பெற்றோர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

2004ஆம் ஆண்டு அங்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் உருவான பிறகு, முஸ்லிம்கள் அதிகமாக உள்ள தாய்லாந்தின் தெற்கு மாகாண எல்லைப்குதிகளில் சுமார் 5,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.