தற்கொலை படை வீரருக்கு பயிற்சி : எதிர்பாராமல் குண்டு வெடித்து 22 பயங்கரவாதிகள் பலி

bomblastஈராக்கில் தாக்குதல் நடத்துவதற்காக தற்கொலை படை வீரர் ஒருவருக்கு பயிற்சி அளித்த போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் தற்கொலை படை வீரர் உட்பட 22 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

பயங்கரவாதிகளின் பயிற்சிக் கூடத்தில் நடந்த இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்குச் சென்ற ராணுவத்தினர், பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட வேண்டிய தாக்குதல் பயிற்சியின் போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடித்துள்ளது. இது மிகவும் கேலிக்குறியதாக உள்ளது. மற்ற பயிற்சிகளைப் போல, வெடிகுண்டை பெல்டில் இணைத்து வெடிக்க வைத்து பயிற்சி செய்துள்ளனர். பொதுமக்களுக்கு பதிலாக பயங்கரவாதிகளே இதில் உயிரிழந்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளது. இப்பகுதியை பொதுமக்களும் சென்று பார்த்து வருகின்றனர்.