புலிகள் தொடர்ந்தும் இயங்குகின்றனர்! ஆயுதங்களையும் கொள்வனவு செய்கின்றனர்!- அமெரிக்கா

lttelogoதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்காவின் வருடாந்த பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  எனினும் அவர்கள் சர்வதேச வலையமைப்புகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன.

எனினும் 2013ம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக வட அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் பாரிய அளவு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் நிதித் திரட்டல்கள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை அமெரிக்கா, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடையை இந்த வருடமும் நீடித்துள்ளது.

TAGS: