இராணுவத்தினர் தமது அதிகாரத்தை கொண்டு தமிழர்களின் காணிகளை பறிக்கின்றனர்: சிவாஜிலிங்கம்

sivajilinghamஇராணுவத்தினர் தமது அதிகாரத்தை காட்டி தமிழர்களின் காணிகளை பறிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக சந்தேசிய என்ற பிபிசியின் சிங்கள சேவை தெரிவித்துள்ளது.

கீரிமலை பிரதேசத்தில் இராணுவத்தினர் 300 ஏக்கர் காணியை சுவீகரித்துள்ளமையை சுட்டிக்காட்டியே சிவாஜிலிங்கம் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

ஏற்கனவே இராணுவத்தினரால் 6400 ஏக்கர் காணியை இராணுவம் சுவீகரித்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு காணி சுவீகரிப்புக்கு எதிராக போராடும் என்று சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: