இந்திய பத்திரிகையாளர்களை வெளியேற்றும் பாகிஸ்தான்

ind_pak_flag_001இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள் ஒரு வாரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில், இந்தியாவை சேர்ந்த ஸ்ரீனிகேஷ் அலெக்ஸ் பிலிபஸ், மற்றும் மீரா மேனான் ஆகிய இருவரும் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு, பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அவர்கள் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ள கடிதத்தில், இவர்களது விசா புதுப்பிக்கபட மாட்டாது என கூறி உள்ளது. மேலும் அவர்களை வெளியேற சொல்வதற்கான காரணத்தை குறிப்பிடவில்லை.

பாகிஸ்தானில் மற்ற வெளிநாட்டு பத்திரிகையாளர்களை விட இந்திய பத்திரிகையாளர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ளது.