40 கரும்புலிகளை பிடிக்க இண்டர்போல் பிடிவிராந்து: சிங்களப் பத்திரிகை

karumpulikal-300x173குண்டு தாக்குதலைகளை நடத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்திய விடுதலைப் புலிகளின் 40 கரும்புலிப் படை உறுப்பினர்களை கைது செய்ய இண்டர்போல் பொலிஸார் சர்வதேச பிடிவிராந்து பிறப்பித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.

இவர்கள் பிரித்தானியா, பிரான்ஸ், நோர்வே, கனடா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளில் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இவர்களில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் தலைவர் ரெஜி, இலங்கை அரச அதிகாரிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்த வேலுப்பிள்ளை ரேவதந்தன் ஆகியோரும் அடங்குகின்றனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

karumpulikal

TAGS: