இந்திய மீனவர்களின் அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்- இலங்கை மீனவர்கள்

tamilnadu_fishermanஇந்திய மீனவர்களின் அத்துமீறல்களை நிறுத்தவேண்டும் என்று இலங்கை மீனவர்கள் இன்று கோரிக்கை விடுத்தனர்

தேசிய மீனவக்கூட்டுறவின் அழைப்பாளர் அந்தனி ஜேசுதாசன் இந்தக்கோரிக்கையை முன்வைத்தார்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இன்று இடம்பெற்ற கையெழுத்து திரட்டல் போராட்டத்தின்போது வடக்கில் இந்திய மீனவர்கள் அத்துமீறல் மீள்குடியேற்றம் காணி சுவீகரிப்பு மற்றும் மீனவர்களுக்கான எரிபொருள் நிவாரணம் என்பவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது

இதன்போது கருத்துரைத்த ஜேசுதாசன் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் முடிவுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்

இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பேச்சுவார்த்தை வெற்றிப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்

இந்த விடயத்தில் இணக்கம் இன்மை காரணமாகவே அண்மையில் இடம்பெற்ற இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தை தோல்விக்கண்டதாகவும் ஜேசுதாசன் கூறினார்

TAGS: