மோடி கூறுவது போல் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது!- அருண் தம்பிமுத்து

13vathi thiruththamஇந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறுவது போல் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் பாரதூரமான பிரச்சினை ஏற்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து நேற்று அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதை முழு கிழக்கு மாகாண மக்களும் எதிர்க்கின்றனர்.

அது கிழக்கு மாகாண மக்களுக்கு அவசியமில்லை எனவும் அருண் தம்பிமுத்து கூறியுள்ளார்.

இந்தியா, இந்நாட்டின் மீது பலவந்தமாக திணித்த 13வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள கிழக்கு மக்கள் தயாரில்லை.

அதனை அமுல்படுத்தினால் கிழக்கு மக்களுக்கே கடும் அநீதி ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை செயற்படுத்த அதிகாரத்தை வழங்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு நேற்று வெள்ளிக்கிழமை வழங்கிய நேர்காணலில் அருண் தம்பிமுத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

TAGS: