வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: இஸ்லாமிய ஒத்துழைப்பு சம்மேளனம்

Buddhist_mob_attacks_11இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று இஸ்லாமிய ஒத்துழைப்பு சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த சம்மேளனத்தின் செயலாளர் இயட் அமீன் மதானி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கையின் தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. இதில் இறப்புக்களும் காயங்களும் ஏற்பட்டுள்ளன.

சொத்துக்களுக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.  எனவே குறித்த வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று மதானி கோரியுள்ளார்.

இலங்கையின் சமாதானத்துக்காக முஸ்லிம்கள் பாடுபட்டு வந்துள்ளனர்.

இந்தநிலையில் வன்முறைகளை மேலும பரவாமல் தடுக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு என்று மதானி கேட்டுள்ளார்.

TAGS: