போர்க்குற்ற விசாரணைகளுக்கு பான் கீ மூன் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார் – ஸ்டீவன் டுஜாரிக்

stephane_dujarricமனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் முழுமையான ஆதரவை வழங்குவார் என்று மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் ஸ்டீவன் டுஜாரிக் இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்னர்சிட்டி பிரஸின் கேள்விகளுக்கு நேற்று பதில் வழங்கிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள், ஒஸ்கார் பெர்ணாண்டிஸின் இலங்கை விஜயம் போன்ற விடயங்கள் தொடர்பில் இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பி இருந்தது.

இதற்கு பதில் வழங்கிய பேச்சாளர் இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை சம்பவங்களை ஐக்கிய நாடுகள் சபை கண்டிப்பதாக தெரிவித்தார்.

மேலும் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார் என்றும் தெரிவித்தார்.

TAGS: