பண்டாரவன்னியன் முதல் பிரபாகரன் வரை அநீதிகளுக்கு எதிராக போராடியவர்கள்: சிவசக்தி ஆனந்தன் எம்.பி

pandara_vaniyan_vila_001பண்டாரவன்னியனில் இருந்து பிரபாகரன் வரைக்கும் நாட்டில் இருக்கக்கூடிய அடக்குமுறைகள், அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடிய வரலாறு தான் எமது தமிழர் வரலாறு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற மாவீரன் பண்டாரவன்னியன் வரலாற்று நாடக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், கலாநிதி தமிழ்மணி அகழங்கன், மனித உரிமை செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான சண் மாஸ்டர், வவுனியா மத்திய கல்லூரி அதிபர் பத்மநாதன், வவுனியா பிரதேச கலாசார உத்தியோகத்தர் நித்தியானந்தன், மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உப தலைவர்கள், வவுனியா நகர வர்த்தக பிரமுகர்கள், வர்த்தக சங்கத்தினர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து நிகழ்வினை கண்டு களித்தனர்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,

பண்டாரவன்னியன் தொடக்கம் பிரபாகரன் வரை அநீதிகளுக்கு எதிராக தமிழர்கள் கிளர்ந்தெழுந்து போராடினர்.

இதுவே எமது வரலாறு. நாம் இனியும் அநீதிகளுக்கு எதிராகப் போராடுவோம்.

பண்டாரவன்னியனின் வீரவரலாற்றை எமது மக்களுக்கு, அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். அதற்கு இவ்வாறான நிகழ்வுகள் பயனுள்ளதாக அமையும்.

பிரித்தானியரின் அடக்குமுறைக்கெதிராகப் போராடிய பண்டார வன்னியன், இந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரம் நிறைந்த ஒரு மாவீரன்.

இந்த வரலாற்றை யாரும் மறைக்க முடியாது. இந்த வரலாற்றை நாம் சந்ததி சந்ததியாக வெளிப்படுத்த வேண்டும் என  குறிப்பிட்டார்.

 

TAGS: