கைதான விடுதலைப்புலிச் சந்தேகநபர்களை அழைத்து வர இலங்கை பொலிஸார் மலேசியா பயணம்!

malaysian-police-arrest-ltteமலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் நான்கு பேரையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்காக இலங்கையின் 4 விசேட பொலிஸ் அதிகாரிகள் மலேசியா செல்லவுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இவர்களை இலங்கையிடம் கையளிக்க மலேசிய அதிகாரிகள் இணங்கியுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்பட மலேசிய அதிகாரிகள் இலங்கைக்கு உறுதியளித்துள்ள நிலையில் இந்த நால்வரும் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்களில் ஒருவர், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை 1999ம் ஆண்டு கொழும்பு நகரசபை மைதானத்தில் வைத்துக் கொலை செய்ய முயன்றமை தொடர்பில் முக்கிய சந்தேகநபர் என்று இனங்காணப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

TAGS: