வடக்கு,கிழக்­குக்கு மட்டும் ஏன் இரா­ணுவ ஆளு­நர்கள்?

suresh-premachandranதமிழர் தாயகப் பகு­தி­க­ளான வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு மட்டும் இரா­ணுவ ஆளு­நர்கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பதேன் எனக் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ள தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, ஜனா­தி­ப­திக்கு இருக்கும் அதி­கா­ரங்­களை நன்­க­றிந்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.

வடக்கு மாகா­ணத்­திற்கு ஆளு­ந­ராக மீண்டும் முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரி­யான ஜி.ஏ.சந்­தி­ர­சிறி நிய­மிக்­கப்­பட்­ட­மையை அடுத்து தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு தனது கடு­மை­யான கண்­ட­னத்தை வெளியிட்டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து கருத்து வெளியிட்­டி­ருந்த அமைச்சர் பசில் ராஜ­பக்ச ஆளு­ந­ராக யாரை நிய­மிப்­பது என்ற அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு உள்­ள­தா­கவும், கூட்­ட­மைப்பு அது தொடர்பில் பேசு­வ­தற்கு அரு­க­தை­ இல்லை­யெ­னவும் கருத்து தெரி­வித்­தமை தொடர்பில் வின­வி­ய­ போதே தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஸ்­ பி­ரே­மச்­சந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறு­கையில்,

முப்­பது வரு­டங்­க­ளாக யுத்தம் நடந்த பூமியில் சுமார் நான்கு ஆண்­டுகள் கடந்த பின்னர் சர்­வ­தேச அழுத்­தங்­களைக் குறைப்­ப­தற்­காக வட­மா­காண சபைத் தேர்­தலை அர­சாங்கம் நடத்­தி­யது. அத்­தேர்­தலில் தமிழ் மக்கள் எமக்கு உரி­மை­களே வேண்டும் என்ற செய்­தியை ஆணித்­த­ரமாக வெளிப்­ப­டுத்தி தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கு ஆணையை வழங்­கி­யி­ருந்­தனர்.

இந்­நி­லையில் அர­சாங்கம் யுத்­த­ வெற்­றியைத் தொடர்ந்து வடக்கில் ஜன­நா­ய­கத்­தினை நிலை­நாட்­டி ­விட்­ட­தாக மார்தட்­டிக்­ கொண்­டது. அத்­துடன் ஏற்­க­னவே வட மாகா­ணத்­திற்கு முன்னாள் இரா­ணுவ அதிகாரியை ஆளு­ந­ராக நிய­மித்­தி­ருந்த அர­சாங்கம் தேர்தல் வெற்­றியை பொறுத்­துக் ­கொள்ள முடி­யாது, வட மாகா­ணத்தில் ஜன­நா­யகச் செயற்­பா­டுகள் முன்­னெ­டுப்­பதை படிப்­ப­டி­யாக ஆளு­நரின் உதவியுடன் திட்­ட­மிட்டு கட்­டுப்­ப­டுத்த ஆரம்­பித்­தது.

இந்­நி­லையில் முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரி­யொ­ருவர் ஆளு­ந­ராக செயற்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என வட­மா­காண­சபை ஏக­ம­ன­தாக தீர்­மா­னித்­தி­ருந்­த­துடன், வடக்கு முத­ல­மைச்சர் சீ.வி.விக்கினேஸ்­வரன் நேர­டி­யாக ஜனா­தி­ப­தி­யிடம் குறித்த விடயம் தொடர்பில் தெளிவு­ப­டுத்­தி­யி­ருந்தார்.

அதன் போது ஜூலை மாதத்தில் ஆளு­நரின் பத­விக்­காலம் நிறை­வுக்கு வரும் நிலையில், சிவில் சமூ­கத்தைச் சேர்ந்­த­ ஒருவர் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­ப­ட­ வேண்டும் என கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்­து­வ­தா­கவும் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

இருப்­பினும் மீண்டும் அதே இரா­ணுவ அதி­கா­ரியையே ஆளு­ந­ராக நிய­மனம் செய்­தி­ருக்­கின்றார். இச் செயற்­பா­டா­னது வடக்கை இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டினுள் தொடர்ந்தும் வைத்­தி­ருக்கும் அர­சாங்­கத்தின் எண்­ணத்தை அப்­பட்­ட­மாக வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அவ்­வா­றி­ருக்­கையில் அமைச்சர் பசில் ராஜ­பக்ச வடக்கில் யாரை வேண்­டு­மா­னாலும் ஆளு­ந­ராக நிய­மிக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்­குள்­ள­தா­கவும், கூட்­டமைப்பு அது­பற்றி பேசு­வ­தற்கு அரு­க­தை­யில்லை எனவும் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். இது அவர்­க­ளது பெரும்­பான்­மை­யி­னரின் ஏதேச்­ச­தி­கா­ரத்தை வெளிப்­ப­டுத்தி நிற்­கின்­றது.

மேலும் வடக்கு மாகா­ணத்தில் தமிழ் மக்­களின் எண்­பது சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான ஆணை­ பெற்ற தமிழ்த் ­தே­சியக் கூட்­மைப்­புக்கு ஜனா­தி­ப­திக்கு என்ன அதி­காரம் இருக்­கின்­றது, முத­ல­மைச்­ச­ருக்கு உள்ள அதி­காரம் என்ன?, ஆளு­ந­ருக்கு காணப்­படும் அதி­கா­ரங்கள் எவை என்­பதை நன்­க­றிந்­துள்­ளது.

அத்­துடன் அமைச்சர் பசில் ராஜ­ப­க்சவிற்கு அதி­காரம் பற்றி பேசும் தகைமை எந்­த­ள­விற்கு இருக்­கின்­றதோ, அதே­ய­ள­விற்கு இந்த நாட்டில் காணப்­படும் அரசியல் அமைப்பின் அடிப்­படைச் சட்­டங்­களின் பிர­காரம் ஜன­நா­யக உரி­மைகள் எமக்கும் உள்­ளன என்­பதை அவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

ஜன­நா­யகம் பற்றி போலிக்­க­தை­களை கூறும் இவர்கள் இரா­ணுவ ஆட்­சியை முன்­னெ­டுப்­பது எந்­த­வ­கையில் நியா­யமாகும்.

யுத்தம் நிகழ்ந்த பூமியில் ஜன­நாயகம் நிலை­நாட்­டப்­ப­ட­ வேண்­டுமானால் சிவில் நிரு­வாகம் அமை­யப்­பெ­ற­ வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதற்­கு ­மா­றாக வடக்கில் இரா­ணுவ உயர்­பா­து­காப்பு வல­யங்­க­ளையும், முகாம்­க­ளையும் நிரந்­த­ர­மாக்­கி­ வரும் அர­சாங்கம் இரா­ணு­வப் ­பி­ர­சன்­னத்­தையும் அதி­க­ரித்து பொது­மக்கள் சுதந்­தி­ர­மாக நட­மாடும் உரி­மை­யையும் நிகழ்ச்சி நிர­லுடன் மறுத்து வருகின்றது.

இந்நிலையிலேயே நாம் ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தோம். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்ததிருந்த அரசாங்கம் மீண்டுமொருமுறை நம்பவைத்து கழுத்தறுத்திருக்கின்றது.

தற்போது தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கிற்கும் கிழக்கிற்கும் மட்டுமே முன்னாள் இராணுவ அதிகாரிகளை ஆளுநராக நியமிக்கவில்லை? அரசாங்கம் ஏனைய தெற்கு, மத்திய, மாகாணங்களுக்கு அவ்வாறு நியமிக்காதது ஏன்?

ஆகவே இச்செயற்பாடானது அரசாங்கம் தொடர்ந்தும் தமிழர்களை இராணுவ அடக்குமுறைக்குள் வைத்து ஆட்சியை முன்னெடுப்பதையே காட்டிநிற்கின்றது.

சந்திரசிறி மீண்டும் ஆளுநராக நியமிக்கப்பட்டதை எதிர்க்கின்றோம் – ஜே.வி.பி

வடக்கு மாகாண ஆளுநராக ஜீ.ஏ. சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டதை எதிர்ப்பதாக ஜே.வி.பியின் பிரச்சார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தை தொடர்ந்தும் இராணுவ ஆட்சியின் கீழ் வைத்திருக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இராணுவ அதிகாரியான சந்திரசிறிக்கு சிவில் பற்றி எதுவும் தெரியாது. கடந்த காலங்களில் வடக்கு மக்கள் எதிர்நோக்கிய துன்பங்களை மீண்டும் ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்.

ஜீ.ஏ. சந்திரசிறி ஆளுநராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக கடந்த காலங்களில் மக்களின் கண்ட குரல்கள் எழுந்தன.

மக்கள் பக்கம் இருந்து நானும் இந்த நியமனத்தை எதிர்க்கின்றேன். சிவில் நிர்வாகம் நடக்கும் பிரதேசத்தில் இராணுவ அதிகாரியை ஆளுநராக நியமிப்பதால் இராணுவ நிர்வாகம் ஏற்படும் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்புக்கு தேவையானவரை ஆளுநராக நியமிக்கவே முடியாது என்கிறார் அமைச்சர் பசில்

basilவட மாகாண சபைக்கு ஆளுநரை நியமிக்கும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. அது தொடர்பில் கேள்வியெழுப்பவோ எதிர்ப்பு வெளியிடவோ கூட்டமைப்பினால் முடியாது என்றும், தமிழ் தேசியக்  கூட்டமைப்புக்கு தேவையானவரை ஆளுநராக நியமிக்கவே முடியாது என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

வட மாகாண சபை ஆளுநராக மேஜர் ஜெனரல் சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை கடுமையாக எதிர்த்துள்ளமை குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இந்த விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது ;

வட மாகாண சபைக்கு ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அது தொடர்பில் கேள்வியெழுப்பும் சட்ட உரிமையோ அதிகாரமோ கூட்டமைப்புக்கு இல்லை. மாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்துபவராகவே ஆளுநர் செயற்படுகின்றார்.

வட மாகாணம் என்பது நாட்டிலிருந்து பிரிபட்டதல்ல. இலங்கையின் ஒரு மாகாணம். இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் வட மாகாண சபைக்கான பிரதிநிதியாக யாரையும் நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. பல மாநிலங்கள் உள்ள இந்தியாவில் கூட இவ்வாறு மத்திய அரசாங்கத்துக்கு வேண்டப்பட்டவர்களே ஆளுநர்களாக நியமிக்கப்படுகின்றனர். இந்தியா மட்டுமல்ல முழு உலகிலும் இவ்வாறு தான் நிலைமை உள்ளது.

அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பொறுத்தவரை எமக்குத் தேவையானவர்களே நாங்கள் ஆளுநராக நியமிப்போம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை அவர்களுக்கு வட மாகாண சபை நிர்வாகம் கிடைத்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். வட மாகாண சபை அமைச்சரவை உள்ளது. முதலமைச்சர் பதவி ஆகியவை உள்ளன.

இந்நிலையில் ஆளுநர் பதவியிலும் கூட்டமைப்புக்குத் தேவையானவர்களை நியமிக்க முடியாது. ஜனாதிபதிக்கு விசுவாசமான வடக்கு பற்றித் தெரிந்த தெற்கைச் சேர்ந்த ஒருவரே ஆளுநராக நியமிக்கப்படுவார். அதனை யாராலும் எதிர்க்க முடியாது.

கூட்டமைப்பு எதிர்க்கின்றது என்பதற்காக அவர்கள் கூறுகின்றவரை ஆளுநராக நியமிக்க முடியாது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஜனாதிபதி தனக்கு தேவையானவரையே ஆளுநராக நியமித்துள்ளார். அதுதான் சம்பிரதாயமாக உள்ளது. அதனை மாற்ற முடியாது.

கேள்வி: கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் கூட்டமைப்பு எங்களுடன் ஒத்துழைக்க வேண்டு:ம் என்று அரசாங்கம் கூறுகின்றது. இந்நிலையில் இந்த விடயத்தில் ஒத்துழைப்பு என்ற நோக்கத்துக்காக கூட்டமைப்பின் கோரிக்கைக்கு செவிமடுக்கலாமே?

பதில்: ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நாங்கள் நியமிக்கும் ஆளுநருடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேணடும் என்பதே எமது கோரிக்கையாகும். எம்முடன் ஒத்துழைப்புடன் வேலை செய்ய வேண்டும் என்று கூட்டமைப்பு கருதினால் ஆளுநருடன் ஒத்துழைப்புடன் செயற்டலாம்.

கேள்வி முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் வேண்டாம் என்றுதானே கூட்டமைப்பு கூறுகின்றது?

பதில் – முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை வட மாகாண ஆளுநாக நியமிக்கவேண்டாம் என்று கூறுகின்ற அருகதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. அதாவது நாட்டின் தலைவராக இராணுவ அதிகாரி ஒருவரை நியமிக்க முயற்சித்த கூட்டமைப்புக்கு முன்னாள் இராணுவ அதிகாரி ஆளுநராக நியமிக்கப்படுவது கசக்கின்றதா? என்று வினவுகின்றோம்.

அவர் முன்னாள் இராணுவ அதிகாரி மட்டுமேயாவார். தற்போது இராணுவ அதிகாரியாக இல்லை. எம்மைப் பொறுத்தவரை வடக்குப் பற்றி தெரிந்த ஒருவரை ஆளுநராக நியமிக்க வேணடியது அவசியமாகும். அதனை யாராலும் மாற்ற முடியாது.

கூட்டமைப்பை பொறுத்தவரை அவர்களுக்கு தனிப்பட்டவர்கள் குறித்து பிரச்சினைகள் இருக்க முடியாது. மாறாக அவர்களின் கொள்கைகளே அவர்களின் முரண்பாட்டுக்கு காரணமாக அமைகின்றது. வட மாகாண ஆளுநர் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் கூட்டமைப்புக்கு எந்தப் பிரச்சினையும் இருக்க முடியாது. ஆனால் கொள்கைகள் அடிப்படையில் அவர்களுக்கு பிரச்சினை இருக்கலாம் என்று நாங்கள் கருதுகின்றோம். அதற்காக அவர்கள் கூறுகின்றவரை ஆளுநராக நியமிக்க முடியாது.

வடக்கைப் பற்றி தெரிந்த எமக்கு விசுவாசமானவரையே நாங்கள் நியமிப்போம். மாகாண சபையை பொறுத்தமட்டில் ஆளுநர் என்பவர் ஒரு அதிகாரி மட்டுமேயாவார். அதிகாரம் முழுவதும் ஆளும் கட்சிக்கே உள்ளது. அந்தவகையில் வட மாகாண சபையின் ஆளும் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகின்றது.

இந்நிலையில் அவர்களினால் மக்களுக்கு சேவையாற்ற முடியும். ஆளுநர் என்பவர் முதலமைச்சர் அல்ல. அவர் ஒரு அதிகாரி. மத்திய அரசாங்கத்துக்கும், மாகாண அரசாங்கத்துக்கும் இடையில் இணைப்பாளராக கடமையாற்றுகின்றவர். எனவே அவரை மாற்றிவிட்டு தங்களுக்கு தேவையானவரை நியமிக்குமாறு கோர முடியாது.

கேள்வி –  தாம் அதிகாரத்தில் உள்ள மாகாண சபைக்குத் தேவையான ஆளுநரை கூட்டமைப்பு கோர முடியாதா?

பதில் – வட மாகாண சபையின் ஆட்சியையும் அதிகாரத்தையும் வைத்துக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபைக்கான ஆளுநர் பதவியையும் கோருவது நியாயமற்றதாகும்.

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றுக்கு நாங்கள் ஊடகவியாளர்களை அழைக்கும் போது குறிப்பிட்ட ஊடகவியலாளரை அனுப்புமாறு நாங்கள் கோர முடியாது. அது பத்திரிகை ஆசிரியருக்கு உள்ள உரிமையாகும்.

அதேபோன்று தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமாறு கூட்டமைப்பை கோரியுள்ளோம். ஆனால் கூட்டமைப்பில் உள்ள ஒருவரை குறிப்பிட்டுக்காட்டி அவரை அனுப்புமாறு நாங்கள் கோர முடியாது. கூட்டமைப்பின் தலைமை விரும்புகி்ன்ற பொருத்தமானவரையே அனுப்புவார்கள். அதுதான் ஜனநாயக பண்பாகவுள்ளது.

அதுபோன்றே வட மாகாண சபைக்காக மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக எமக்குத் தேவையானவரையே நியமிப்போம். அது தொடர்பில் எவரும் கேள்வியெழுப்ப முடியாது.

கூட்டமைப்பினர் தற்போது மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசிக்கொண்டிருக்காமல் சர்வதேச பிரச்சினைகள் குறித்து பேசுகின்றனர். மக்களுக்கு சேவையாற்றாமல் தொடர்ச்சியாக அரசாங்கத்தை குறைகூறுகின்றனர். வடக்கில் தற்போது கல்வி, சுகாதாரம், மீன்பிடி, விவசாயம், நீர்ப்பாசனம் போன்ற துறைகள் வீழ்ச்சி கண்டுள்ளன. பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க முடியுமாக இருந்தாலும் வட மாகாண சபை எதனையும் செய்யாமல் உள்ளது. மக்களுக்கு சேவையாற்றுங்கள் என்றே நாங்கள் கூறுகின்றோம்.

ஆனால் வட மாகாண சபை ஆளும் கட்சியானது அதிகாரிகளுடன் சண்டை போடுவதையும் ஊடகவியலாளர்களுடன் முரண்படுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. மக்களை சநதிப்பதில்லை. மாவட்டங்களுக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகின்றன. அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்தே பேசிக்கொண்டிருக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தனிப்பட்ட ரீதியில் என்னை சந்தித்து பல்வேறு விடயங்களை கூறுகின்றனர். எம்மை அடிக்கடி சந்தித்து பல விடயங்களை குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் பார்க்கும் போது கூட்டமைப்பிலும் உள்ளகபிரச்சினைகள் அதிகரித்து விட்டதாகவே உணர்கின்றோம் என்றார்.

TAGS: