ஆதாரங்களை அனுப்பி வைக்குமாறு கோருகிறது ஐ.நா.விசாரணைக்குழு

un-inquiry-commissionஇலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்டு தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஐ.நா.விசா­ரணை குழு­விடம் தகவல்கள் மற்றும் ஆதாரங்களை அனுப்பி வைக்கலாம் என்று ஐ.நா.மனித உரிமை ஆணை­யா­ளரின் அலு­வ­லகம் அறி­வித்­துள்­ளது.

 21.02.2002 முதல் 15.11.2011 வரை­யான காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்பில் முறைப்­பா­டு­களை தெரி­விக்­கலாம் என்றும் அந்த அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து ஆணை­யாளர் அலு­வ­ல­கத்தின் இணை­யத்­த­ளத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது.

எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் 30ம் திக­திக்கு முன்னர் முறைப்­பா­டுகள் அனுப்­பப்­ப­ட­ வேண்டும். முறைப்­பா­டு­களை ஆங்­கி­லத்தில் மட்­டு­மன்றி தமிழ் மொழி­யிலும் அனுப்பி வைக்­கலாம்.

அனுப்­ப­ வேண்­டிய முக­வரி:

மின்­னஞ்சல் மூலம் அனுப்­பு­வ­தாயின்: [email protected] என்ற முக­வ­ரிக்கும்

அஞ்சல் மூலம் அனுப்­பு­வ­தாயின்

OISL
UNOG-OHCHR
8-14 Rue de la Paix
CH-1211 Geneva 10
Switzerland என்ற முக­வ­ரிக்கும் அனுப்ப வேண்டும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முறைப்­பா­டுகள் அனைத்தும் 10 பக்­கங்­க­ளுக்கு உட்­பட்­ட­தாக இருக்க வேண்டும்.

காணொ­ளிகள், நிழற்­ப­டங்கள், ஒலிப்­ப­தி­வுகள் போன்ற வடிவில் ஆதா­ரங்­களை அனுப்பி வைக்க விரும்­பு­ப­வர்கள் முதலில் மின்­னஞ்சல் மூலம் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் செய­ல­கத்­துடன் தொடர்பை ஏற்­ப­டுத்த வேண்டும் என்றும், அதன் பின்னர் சம்­பந்­தப்­பட்ட ஆதா­ரங்­களை உரியவர்கள் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகம் அறிவித்துள்ளது.

TAGS: