சீனாவில் புயல் மழை: 27 பேர் பலி

china_flag_001சீனாவின் தென் மேற்கு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் 87 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

புஜியான், ஜியாங்க்சி, ஹூனான், குவாங்டாங், சிச்சுவான், கியுஸூ மற்றும் குவாங்ஸி ஜுவாங் மாகாணங்களில் கடந்த ஒரு வாரமாக  பெய்து வரும் மழையால் 27 பேர் பலியாயினர். 6 பேர் காணாமல் போனதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த கடுமையான புயல் மழையால் 2,100 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 4,500 ஹெக்டேர் பயிர்கள் அழிந்தன. 292 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.