தீவிரவாதிகளை கொன்று குவித்த இராணுவம்

boko_haram_001நைஜீரியாவில் தனி இஸ்லாமிய நாடு உருவாக்க வலியுறுத்தி அந்நாட்டு இராணுவத்துக்கு எதிராக போகோஹரம் தீவிரவாதிகள் போராடி வருகிறார்கள்.

மேலும் அப்பாவி பொதுமக்களை கடத்தி கொன்று குவித்தும் வருகிறார்கள்.

இந்த நிலையில் போகோஹரம் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த கொண்டுகா நகரில் நேற்று முன்தினம் நைஜீரியா ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.

போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் குண்டுகளை வீசி வான்வழியாகவும், தரைமார்க்கமாகவும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தீவிரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும், ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் தீவிரவாதிகள் பயன்படுத்திய வாகனங்களையும் ராணுவத்தினர் கைப்பற்றினர்.