யாழில் 1300 ஏக்கருக்கு அதிகமான காணிகள் எதிர்வரும் வாரங்களில் ஆக்கிரமிக்கப்படவுள்ளன!!

Sri Lanka Shadow Warஎதிர்வரும் நாட்களில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் 1300 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் இராணுவத்தின் தேவைக்காக ஆக்கிரமிக்கப்படவுள்ளன.

ஆங்கில ஊடகம் ஒன்றை இதனைத் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாதகல், திக்கம், நுனாவில், சாவகச்சேரி மற்றும் அச்சுவேலி போன்ற பகுதிகளில் இந்த காணி ஆக்கிரமிப்புகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளாக அவை இருந்த போதும், அவை இராணுவத்தின் தேவைக்காக ஆக்கிரமிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப் போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இந்த வார இறுதியில் இந்த காணிகளை அளவீடு செய்யும் பணிகள் பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

TAGS: