வடக்கில் பயங்கர இராணுவ ஆட்சி: மாவை எம்.பி

Mavai-Senathirajahவெளிநாட்டவர்கள் வட பகுதிக்கு செல்வதை தடை செய்யும் அரசாங்கம், அங்கு வாழ்கின்ற மக்கள் திறந்த வெளி சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டதன் காரணமாகவே இந்த தடை உத்தரவை அரசு செயற்படுத்துகின்றது என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வடக்குக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சிடம் முன்கூட்டிய அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய அண்மையில் அறிவித்தல் விடுத்திருந்தார்.

இது தொடர்பாக ஊடகமொன்று வினவியபோதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் வன்மையாக கண்டிப்பதோடு, மேற்குலகுக்கு எடுத்து செல்லவிருக்கின்றோம். அத்தோடு இது பற்றி பாராளுமன்றத்திலும் கேள்வி எழுப்பவுள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: