அழகா…நீலநிறக் கண்ணா? யாஸிதி சிறுமிகளை விலைபேசி விற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்

isis_sells_001ஈராக்கில் கடத்தி சென்ற யாஸிதி சிறுமிகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விலைக்கு வாங்குவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை அதிகரித்துள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், சின்சார்(Sinchar) மலைப்பகுதியிலிருந்து கடத்தி சென்ற சுமார் 10,000க்கும் மேற்பட்ட யாஸிதி பெண்களையும் சிறுமிகளையும் துன்புறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடத்தப்பட்ட சிறுமிகளை விற்பது, வாங்குவது தொடர்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பேசிக்கொண்டிருப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், இன்று யாஸிதி அடிமைகளை விற்கும் நாள். அதனால் அவரவர் விரும்பிய சிறுமிகளை எடுத்துக் கொண்டு மற்றவர்களை விபச்சார சந்தையில் விற்றுவிடலாம் என பேசிக் கொள்கின்றனர்.

அப்போது தீவிரவாதி ஒருவன், எனக்கு துப்பாக்கி வேண்டும் என்பதற்காக ஒரு சிறுமியை விற்கப்போகிறேன் என்றும் குறிப்பாக நீல நிறக்கண்கள் உடைய சிறுமிகளுக்கு அதிக விலையை பேசப்போகிறேன் எனவும் பகிரங்கமாய் கூறியுள்ளான்.

கைப்பேசியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தீவிரவாதிகளால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. -http://world.lankasri.com