யாழ். பல்கலைக் கழகத்தில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!

ja-27-100x80இராணுவ பாதுகாப்புக்களைத் தாண்டியும் யாழ். பல்கலைக் கழகத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாவீரர் தினத்தை முன்னிட்டு பல்கலைக் கழக வளாகத்திலுள்ள நினைவுத்தூபியில் மாணவர்கள் தீபங்கள் ஏற்றுவார்கள் என்று எதிர்பார்த்து இராணுவமும், பொலிஸாரும் காத்திருந்த வேளையில், பல்கலைக் கழகத்தின் மாணவர் பொது அறையில் தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக வளாகத்துக்குள் வரும் விரிவுரையாளர்கள், மாணவர்களை இராணுவமும், பொலிஸாரும் சோதனை செய்தே அனுமதித்திருந்தனர். ஆனாலும், அதனையும் தாண்டி மாவீரர் தின தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் கூறுகின்றன.

TAGS: