அமைச்சர் பதவிகளை ஏற்க போவதில்லை! 100 நாள் வேலைத்திட்டத்திற்காக காத்திருக்கிறேன்

selvam_adaikkalanathan_001ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய அரசாங்கத்தில் தனக்கு எந்தவிதமான அமைச்சர் பதவிகளையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

100 நாள் வேலைத்திட்டத்திற்காக எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகள் மற்றும் யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற்ற வேண்டிய மக்களுக்கு மீண்டும் நிலங்கள் மற்றும் நிரந்தர வீடுகள் பெற்று கொடுக்க வேண்டியது குறித்து ஜனாதிபதியுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார்.

TAGS: