வடமாகாணசபையின் புதிய ஆளுநராக பள்ளிஹக்கார நியமனம்!

pallikakraவடமாகாணசபையின் புதிய ஆளுநராக வெளியுறவுத்துறையின் முன்னாள் செயலாளர் எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று இதற்கான அறிவித்தலை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணையத்தளத்தில் அறிவித்துள்ளார்.

ஆளுநராக பணியாற்றிய ஓய்வு பெற்ற முள்ளாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பளிஹக்கார முன்னர் ஜெனீவாவிலுள்ள ஐநா அலுவலகத்துக்கான பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார். அதேபோல் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்த விவாதங்கள் ஐ.நாவில் நடைபெற்ற போது அரச தரப்பில் பங்கேற்ற குழுவிலும் இருந்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவில் ஒரு உறுப்பினராகவும் அங்கம் வகித்திருந்தார்.

TAGS: