தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பிரதமருடன் கூட்டமைப்பு பேச்சு!

uno_slankaஅரசியல் கைதிகளை விடுதலை செய்தல், மற்றும் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தல் தொடர்பில் பிரதமருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை நேற்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு த.தே.கூவின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சம்பூர், திருகோணமலை, வலிகாமம் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் மக்களை மீள் குடியேற்றுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சுன்னாகம் நீர் மாசடைதல் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்குமாறு இதன் போது கூட்டமைப்பு பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து ஆராய நீதி அமைச்சினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் அரசியல் கைதிகளை மிக விரைவில் விடுதலை செய்ய நீதி அமைச்சு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: