இந்தியாவுடன் சிறப்பான உறவை மேம்படுத்திக் கொள்ள விருப்பம்: ஜனாதிபதி

maithiriஇந்தியாவுடனான சிறப்பான உறவை பலப்படுத்திக்கொள்ள இலங்கை விருப்பம் கொண்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இந்திய பிரதமர் அவருக்கு வாழ்த்துக்கூறி அனுப்பிய செய்திக்கு பதிலளிக்கும் வகையிலேயே மைத்திரிபால தமது செய்தியை அனுப்பியுள்ளார்.

இந்திய ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று எதிர்வரும் 15ஆம் திகதியன்று மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்கு செல்லும் நிலையிலேயே இந்த செய்தியை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: