இலங்கை சிறுவர்களை லண்டன் கடத்தி சிறுநீரகம் இதயம் திடும் கும்பல்: ஆபிரிக்கர்களா ?

கடந்த 2011ம் ஆண்டு முதல் , ஆபிரிக்க நாடுகளில் இருந்து லண்டனுக்கு பல சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்பட்டு வருவதாக ஸ்காட்லன் யாட் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இவர்கள் அகதிகள் அல்ல. ஆசிய நாடுகளில் சினிமா படங்களில் காட்டுவதுபோல , இச்சிறுவர்களை கடத்தி அவர்களைக் கொன்று அவர்களது உடல் உறுப்புகளை எடுத்து பெரும் பணத்திற்கு விற்று வருகிறது ஒரு லண்டன் கும்பல். இது கடந்த 4 வருடங்களாக நடைபெற்று வந்துள்ளது. இவர்கள் உடல் உறுப்புகளை யாருக்கு விற்கிறார்கள். எவ்வாறு இது நடக்கிறது என்பது கண்டறியப்படவில்லை. ஆனால் இக் குழுவில் உள்ள முக்கியமான சிலர் தற்போது சிக்கியுள்ளார்கள்.

வழமையாக இவர்கள் ஆபிரிக்கர்களை கடத்தி இருந்தால் சந்தேகம் தோன்றி இருக்காது. ஆனால் ஆபிரிக்க நாடுகள் சென்று அங்கே இருந்து வெளிநாடு செல்லவென காத்திருந்த சில இலங்கையர் மீது இவர்கள் கவனம் திரும்பியுள்ளது. ஒரு இலங்கைச் சிறுவன்(வயது 11) மற்றும் 2 ஆபிரிக்க செறுவர்களை (வயது 15, 14) என்று மூவரை அவர்கள் லண்டனுக்கு கடத்த முற்பட்டவேளை இதனை பிரித்தானிய பொலிசார் கண்டு பிடித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களோடு 30 வயது மதிக்கத்தக்க தாயார் ஒருவரும் பயணித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் அகதிகள் அந்தஸ்த்து கோர வரவில்லை. மாறாக பல முறை அவர்களது ரத்தத்தை எடுத்து சோதனை நடத்தியுள்ளார்கள் என்றும் , அறுவை சிகிச்சை செய்து உடல் உறுப்புகளை எடுக்கவே சிலர் திட்டங்களை தீட்டியிருந்தார்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். மீட்டுள்ள சிறுவர்களில் ஒருவர் ஆசிய இனத்தைச் சேர்ந்தவர் என்ற விடையத்தை பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் குறித்த சிறுவன் இலங்கைச் சிறுவன் என்ற உத்தியோகபூர்வமற்ற செய்திகளும் வெளியாகியுள்ளது. சில இலங்கைப் பெற்றோர் தமது பிள்ளைகளோடு ஆபிரிக்கா சென்று , அங்கிருந்து வெளிநாடு செல்ல நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். அவர்களிடம் ஆசை வார்த்தை பேசி, நீங்கள் போகாவிட்டாலும் பரவாயில்லை ஒரு பிள்ளையை நாம் வெளிநாடு கொண்டுபோய் விடுகிறோம் என்று கூறியே இக் கும்பல் பிள்ளைகளை கடத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

-http://www.athirvu.com

TAGS: